Skip to main content
 
 
 

Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons
Cover for All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
335,710
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

Official Facebook page of All India Anna Dravida Munnetra Kazhagam
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

சொந்த மாவட்டத்தில் வெற்றி பெற வக்கில்லாதவர்களின் சங்கமம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறது!

திமுக-வுடன் கூட்டணி என்று ஊடகங்களில் வந்த சில வதந்திகளை தூக்கிக் கொண்டு வருவதை தான் இத்தனை நாள் நீங்கள் தீட்டிக் கொண்டிருந்த மாபெரும் திட்டமா?

அதே ஊடகங்களில் நீங்கள் மூன்று பேரும் போய் த.வெ.க-விடம் மந்திரி பதவிக்கு மண்டியிட்டு கிடப்பதாக கூட செய்திகள் வருகிறதே… அதையும் ஏற்கிறீர்களா?

அது சரி, அதான் ஆளுங்கட்சி பக்கம் வாலாட்ட செல்கிறோம் என்று சொல்லி விட்டீர்களே?

பிறகு, நேற்று திமுக-வின் செந்தில் பாலாஜியோடு அரை மணி நேரம் தனியாக என்ன பேசினீர்கள் என்பதையும் சொல்வீர்களா?

கழகம் யாரோடு கூட்டணியில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்ய நீங்கள் எல்லாம் யார்?

1,34,25,260 வாக்குகள் விழுந்தது நம் கழகத்திற்காக, நம் கூட்டணிக்காக, இரட்டை இலைக்காக, #எடப்பாடியார் என்ற மக்களின் முதல்வருக்காக!

அவர் போட்ட பிச்சையில் வெற்றியை பெற்றுவிட்டு, இன்று உண்ட வீட்டிற்கே இரண்டகம் செய்து, நம் கட்சியை, நம் தொண்டர்களை, நம்மை நம்பி நின்ற கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, அமமுக ஆகியவற்றை, அதன் தொண்டர்களை கைகழுவி விட்டு நீங்கள் மட்டும் அதிகாரத்தோடு வாழ நினைப்பது ஈனத்தனம் இல்லையா?

நீங்கள் எல்லாம் அவ்வளவு பெரிய தலைவர்கள் என்றால், உங்கள் சொந்த மாவட்டத்தில் என்ன கிழித்தீர்கள்? உங்களின் இந்த அதிகாரத் திமிர், பண்ணையார்தனத்தை இன்னும் எத்தனை ஆண்டுகள் தொண்டர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்?

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. Edappadi K. Palaniswami அவர்களால் தான் இந்த இயக்கத்தைக் கட்டிக் காத்தவர்!

எடப்பாடியாரால் தான் தொண்டர்கள்!
எடப்பாடியாருக்காக தான் தொண்டர்கள்!

இந்த இயக்கம் சில சட்டமன்ற உறுப்பினர்களின் இயக்கம் அல்ல. தொண்டர்களின் இயக்கம்.

இந்த இயக்கத்திற்கு எந்த ஒரு பிரச்சனை வந்தாலும், தொண்டர்கள் எடுக்கும் முடிவு தான் வெற்றி பெற்றுள்ளது.

இப்போதும் தொண்டர்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டார்கள்!

-தலைமைக் கழகம்
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
... See MoreSee Less

1 day ago

82 CommentsComment on Facebook

நாங்கள் எடப்பாடியார் பக்கம் நிற்கிறோம் கவலை வேண்டாம் கழகம் நம் பக்கம்

என்றும் EPS வழியில் தொண்டர்கள்....

அண்ணா திமுக வெற்றி பெற வேண்டும் அண்ணா திமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்று நினைத்த தொண்டர்கள் எல்லாம் கழகப் பொதுச் செயலாள எடப்பாடி யார் தான் வேண்டுமென்று விரும்புகிறோம் பதவி ஆசைக்கும் அதிகார போதைக்கும் அலையும் அற்பர்கள் அரசியல் அனாதைகளாக ஆவார்கள்

ஸ்டேண்ட் வித் எடப்பாடி k பழனிசாமி

🤩 எடப்பாடியாரின் உழைப்பு 🥹 சேலம் 7 எம்எல்ஏக்களை 🥹 மாவட்ட அளவில் 🥹 அதிகம் பெற்றுத் தந்தது... 🥹 இது ஒன்றே போதும் 🤩 அவரின் தலைமைக்கு 🤩 அதிமுக வாழ்வதற்கு...

Edappadi K. Palaniswami enrendum ungaludan 🌱🌱🌱✌🏻 Villupuram admk

கட்சியில் இருந்து நீக்கிவிட்டு அடுத்த கட்ட தொண்டர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்

மாவட்டத்தை அழித்து தான் மட்டும் வாழ வேண்டும் என்று நினைத்த இந்த துரோகிகளை வீட்டுக்கு அனுப்புங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏 இந்தத் துரோகிகளோடு சமாதான பேச்சுவார்த்தையே வேண்டாம்

என்றும் பச்சை தமிழர் எடப்பாடி பழனிசாமி

சசிகலா .. TTV ...செந்தில் பாலஜி .... புகழேந்தி... வெற்றி ... kc பழனிச்சாமி ...OPS ... செங்கோட்டையன்...வைத்தியலிங்கம் ... மனோஜ் பாண்டியன்.... +3 MLA ... TTV போகும் போது 11 MLA இத்தனை பேர தூக்கிட்டு கட்சி ஆட்சிக்கு வரும்னு எப்படி நம்புறீங்க... இதெல்லாம் சேர்ந்து இருந்தால் இன்றைக்கு நாம ஆளும்கட்சி Atleast எதிர்கட்சி .... இதுதான் அவர் செய்த தவறு... அவர் எது கட்சிக்கு நல்லது என்று பார்க்கவில்லை ... தன்னுடைய அதிகாரம் தனித்த அதிகாரமாக இருக்க வேண்டும் என்று நினைத்தார் .... ஆனால் அதற்கு வெற்றி அடைய வேண்டும் .... இல்லை என்றால் இப்படித் தான் நடக்கும் ...

தொண்டர்கள் அனைவரும் எடப்பாடி அவர்களின் பக்கமே இருக்கிறார்கள் எதற்கும் கலங்க வேண்டாம் தொண்டர்களாலே இந்த இயக்கம் இயங்கி கொண்டிருக்கிறது இதுவரை ஒரு கோடி தொண்டர்கள் அதிமுகவிற்கு வாக்களித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் அதையே அடுத்த தேர்தலையும் செய்வார்கள் வெற்றி நமதே 💐💐

தன் சொந்த கட்சியை தொடர்ந்து 10 ஆண்டுகளாக வெற்றிபெற வைக்க முடியாதவர் என்று எடப்பாடியாரை சொன்னால் சரியாக இருக்குமா? கட்சியில் குறைந்த பட்ச ஜனநாயகத்தை கூட கடைபிடிக்காமல் தான் வைத்ததே சட்டம் என்று தொடர்ந்து வீழ்ச்சியை நோக்கியே கட்சியை கொண்டு சென்றால் முடிவு இப்படித்தான் இருக்கும்

சேலம் மாவட்ட செயலாளர் அண்ணன் எடப்பாடி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

கட்சியை விட்டு வீரட்டுங்கள் புதுசா கட்டமைப்பு பண்ணி வாங்க

அதிமுக துரோகிகளை கட்சியை விட்டு நீக்க வேண்டும் ங்க ஐயா

கோவை மாவட்டத்தில் SP வேலுமணியைத் தவிர மற்றவர்கள் அனைவரும் தோல்வி, விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி.சண்முகத்தைத் தவிர அனைவரும் தோல்வி, புதுக்கோட்டை மாவட்டத்தில் சி.விஜயபாஸ்கர் தவிர அனைவரும் தோல்வி. தங்கள் மாவட்டத்தில் சரியாக கட்சியை வெற்றிபெற வைக்க முடியாத இந்த நபர்கள் எடப்பாடியாரை குற்றம்சாட்டுவது சரியா. சேலம் மாவட்டத்தில் 11ல் அதிமுக வெற்றிபெற்றுள்ளது... ✌️ ✌️✌️🔥🔥✌️🔥

கிட்டத்தட்ட எட்டு வருடம் முன்பு திருமதி சசிகலா குடும்பத்திடம் அடிமையாய் இருந்தவர்களை மீட்டு, அனைத்து அதிமுகவின் மாவட்ட செயலாளர்களுக்கும் உரிய மரியாதை கொடுத்து, அவர்களை தலைநிமிர வாழ வைத்து, எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மீது துரோகி அடிமை எனும் விமர்சனத்தை தாங்கிக் கொண்டு,அதிமுக கட்சியை அழிக்க நினைத்தவர்களிடம் இருந்து அதிமுகவை காப்பாற்றி, தங்களுக்கு கிடைக்கப்பட்ட நான்கரை ஆண்டுகளில், தமிழகத்தின் சிறந்த முதலமைச்சராக பல வரலாற்றுச் சாதனைகளை படைத்து, 72 வயதிலும் 234 தொகுதிகளுக்கு சென்று வெயில் மழை என்று பாராமல் அணைத்து வேட்பாளர்களுக்கும் வாக்கு சேகரித்து 47 எம்எல்ஏக்கள் அதிமுகவிற்கும்,கூட்டணி கட்சிகளுக்கு 6 எம்எல்ஏ விற்கும் வெற்றி பெற்று இன்று சட்டமன்றத்திற்கு அழைத்துச் சென்ற மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள், விஜய் எனும் மாயை வருகையால் 28 கட்சிக் கூட்டணிகளை வைத்து ஸ்டாலின் அவர்கள் தோற்றதற்கு இதுவே சாட்சி, பொதுச் செயலாளர் மாற்ற வேண்டும் என்றால் பொதுக்குழுவை கூட்டி, அதில் தீர்மானம் நிறைவேற்றி, மாற்ற வேண்டியது அடிப்படை உரிமை, சில பேர் தன் சுய லாபத்திற்காக லீமா ரோசிடம் விலை போய் விட்டார்கள், வேலுமணி மூலம்தான் லீமா ரோசி அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது, இவர்கள் இப்படி பொது வெளியில், பதவிக்க அடித்து கொண்டால் மக்கள் இனி இவர்களை நம்ம மாட்டார்கள். எடப்பாடியார் மற்றும் அதிமுக பின்னால் கோடான கோடி தொண்டர்கள் உள்ளார்கள், மீண்டும் எடப்பாடியார் ஆட்சியை அரியணை ஏறும்... தவெக விற்கு மாற்று அதிமுக தான் தமிழ்நாட்டிற்கு நல்லது..

இக்கட்டான சூழ்நிலையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கொங்கு மண்ணின் மைந்தர் என்ற அடிப்படையில் எடப்பாடி யாருக்கு ஆதரவு அவர் தலைமை இருந்தால்தான் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்

என்றென்றும் எடப்பாடியார்

S.P. Velumani C.Ve Shanmugam Dr.C.Vijayabaskar வாங்கடா இங்க...வந்து பதில் சொல்லுங்கடா சோதா பசங்களா..... வரும்போது உங்களால் வெற்றி பெற்ற எம்எல்ஏக்களை கூட்டு வாங்கடா...

இவனுங்க டிவி கேக்கு சப்போர்ட் பண்ணலாம்னு சொல்லி இருப்பாங்க எடப்பாடி கட்சித் தலைவர் வேணாம்னு சொல்லி இருப்பாரு அதிகார போதைக்கு இவனுங்க அவரு மேல பழியை போட்டு எச்ச பசங்க ஆதரவு கேட்காதவங்க கிட்ட போய் ஆதரவு தருகிறேன் என்று பிச்சை கேட்கிறானுங்க மானங்கெட்டவனுங்க இவனுங்க யோக்கியம் விசுவாசம் என்ன மயிர்னு தெரியாதா

Edappadi K. Palaniswami pls try to bring Annamalai Bjp into All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) to give next 3-4 generation party stability and to counter backstabbers Edappadi K. Palaniswami is the real face of ADMK today... அவர் உழைத்த உழைப்பில் தான் 1 கோடிக்கு மேல் ஓட்டு வாங்கியுள்ளோம்... வேறு எந்த மயிராண்டிகளும் அவர் அவர் தொகுதி தாண்டி கூட வரவில்லை.. 234 தொகுதிகளுக்கும் பயணித்து 3 முனை போட்டி... திமுக எதிராக 3 தரப்பு பிரித்த வாக்கில் மொத்தமாக 1 கோடியே 33 லட்சம் ஓட்டுகளை பெற்றுள்ளார்... இதில் அவர் மட்டுமே 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்... C.Ve Shanmugam S.P. Velumani போன்றோர் புரிந்து கொள்ளவேண்டும்... இது நிலை இல்லாத ஆட்சி... 2 ஆண்டிற்குள் தேர்தல் நிச்சயம்.. வீடு தோறும் சென்று உறுப்பினர் சேர்க்கையை otp மூலம் உறுதிப்படுத்துங்கள் .. மேலும் இளைஞர் பாசறகளை வலுவூட்டுங்கள்.. தொகுதி தோறும் war ரூம்களை set செய்யுங்கள்... நாம் ஜெயிப்பது நிச்சயம்.. தொகுதி வாரியாக 5-10 கட்சி சார்ந்த நபர்களை நிரந்தரமாக பணியமர்த்தி சம்பளம் கொடுத்து கட்சி பணியாற்றுங்கள்..

சொந்த மாவட்டம் எடப்பாடி தக்கவைத்துவிட்டார் என்றால் அவர் தகுதி மாவட்ட செயலாளர் அளவிலே உள்ளது மாநிலம் முழுவதும் வெற்றி பெற வைப்பவரே பொது செயலாளர் அதனால் அந்த பதவிக்கு ஏற்றார் போல நல்ல தலைமையை தேர்வு செய்யவும்.

Always EDAPADIYAAR

சொந்த மாவட்டத்தில் இவர்கள் குழி பறித்தார்கள். ஒட்டுமொத்தமாக அம்மாவின் உழைப்பிற்கு அனைவரும் குழி பறித்துவிட்டீர்கள்.

View more comments

எந்தப் பக்கமும் சாயாத தராசு போல செயல்பட்டு, எதிர்க்கட்சிகளுக்கு பேரவைத் தலைவர் அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்கும், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

-17வது சட்டப்பேரவையின் பேரவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்து தெரிவித்து சட்டமன்றத்தில் பேசிய மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @eps.tamilnadu அவர்கள்.

#TNAssembly #AIADMK
... See MoreSee Less

2 days ago

12 CommentsComment on Facebook

வாழ்க எடப்பாடி ஆர்🌱 வளர்க அஇஅதிமுக 🌱

தலைவரே இதேபோல் வலிமையான எதிர்கட்சியாக சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே கோடான கோடி தொண்டர்களின் விருப்பம்..... தைரியமா இருங்க இதுவும் கடந்து போகும்.... காலமே வலிமையான தலைவனை உருவாக்கும் என்ற நமது தலைவர்களின் வாக்கு மொய்யாகும் காலம் மிக அருகாமையில் உள்ளது.... 🙏🙏🙏

*இன்பதுரை எம்பி ட்வீட்* அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற கட்சித் தலைவருமான @EPSTamilNadu அவர்களால் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ கொறடாவின் உத்தரவை மீறி செயல்படும் எந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கும், அரசியல் அமைப்புச் சட்டத்தின் 10வது அட்டவணையின் கீழ் கட்சித் தாவல் தடை சட்டம் நிச்சயமாக பொருந்தும். சட்டமன்றத்தில் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கட்சியின் அதிகாரப்பூர்வ கொறடா வழங்கும் உத்தரவை மீறி வாக்களித்தாலோ, வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்தாலோ, அல்லது நடுநிலை வகித்தாலோ, அது கட்சித் தாவலாகவே கருதப்படும். சிலர் தனி அணியாக செயல்படுவதாலோ அல்லது பெரும்பான்மை எம்எல்ஏக்கள் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக கூறுவதாலோ, அவர்கள் தனியாக கொறடாவை நியமிக்க முடியாது. அது சட்டப்படி செல்லாது. மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு மிகத் தெளிவாக வழங்கிய தீர்ப்பின்படி: “ஒரு அரசியல் கட்சியின் அதிகாரப்பூர்வ தலைமைதான் சட்டமன்ற கொறடாவை நியமிக்க முடியும்; சட்டமன்ற உறுப்பினர்கள் தாமாக ஒன்று கூடி கொறடாவை நியமிக்க முடியாது.” மேலும், உச்ச நீதிமன்றம் “சட்டமன்றக் கட்சி” மற்றும் “அரசியல் கட்சி” இரண்டும் வேறு எனவும், அரசியலமைப்பு சட்டத்தின் 10 வது அட்டவணை “அரசியல் கட்சியை” தான் அங்கீகரிக்கிறது எனவும் தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, @AIADMKOfficial ன் அதிகாரப்பூர்வ தலைமையான பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள் நியமித்துள்ள கொறடா திரு. அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உத்தரவே சட்டபூர்வமானது ஆகும். எனவே, அதிமுகவின் அதிகாரப்பூர்வ கொறடா உத்தரவை மீறி செயல்படும் எந்த அதிமுக எம்எல்ஏவுக்கும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டால், எம்எல்ஏ பதவி பறிபோகும் என்பதே சட்ட நிலை!

சசிகலாவிற்கு ஓ பன்னீர்செல்வம் செங்கோட்டையனுக்கு செய்த துரோகம் இவரை சும்மா விடுமா

வாழ்த்துக்கள் எடப்பாடி யார் வாழ்க வளமுடன்

Super.thalaiva

ஆமை புகுந்த வீடும் அ.மி.த்.ஷா புகுந்த கட்சியும் தூள் பக்கோடா ஆயிடும்னு படிச்சு படிச்சு சொன்னேனே பழனிசாமி...

வாழ்த்துக்கள் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி K பழனிசாமி

✌🏻🌱#EPS #AIADMK #EdappadiPalaniswami #EPSforTamilnadu #மீண்டும்_வேண்டும்_எடப்பாடியார் #நல்லாட்சினா_எடப்பாடியார்_தான் #மக்களுடன்_EPS #EPSforCM #EPSforTN #AIADMKITWINGOFL #ADMK_KPM #ADMK #admkitwing #ADMKnews #ADMKForTN #அஇஅதிமுக #எடப்பாடியார்_என்னும்_ஆளுமை #tamil #news #election #politics #TamilNews

மக்கள் & அதிமுக தொண்டர்கள் : SP வேலுமணி, cv சண்முகம் குரூப்ஸ் ஏன் கட்சியை உத்டைதீங்க. தேதலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இயலவில்லை என்றா Cv சண்முகம் குரூப் : இல்லை மக்கள் : எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கவில்லையே என்றா Cv &co : இல்லை மக்கள் : அதிமுக கட்சியின் வாக்கு % குறைந்து போன காரணமா SP வேலுமணி, சண்முகம் : எதுவும் இல்லை. விந்தியாவை கட்சிக்கு கூட்டி வந்தது நாங்கள். இப்போ எடப்பாடிக்கு மட்டும் தான் விந்தியா சொந்தம் கொண்டாடினால் நாங்கள் என்ன செய்ய. விந்தியா இல்லாத அதிமுக கழகம் எங்களுக்கு தேவை இல்லை. அதனால் விந்தியா இருக்கும் அதிமுகவை நாங்கள் வைத்து கொள்வோம். #அதிமுக #ADMK #spவேலுமணி #cvசண்முகம் #விந்தியா

View more comments

Load more

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கழக அமைப்பு ரீதியாக மாவட்டங்களைப் பிரித்தல்

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு

3

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மாவட்டக் கழகச் செயலாளர்கள் நியமனம்

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்

4

சொந்த மாவட்டத்தில் வெற்றி பெற வக்கில்லாதவர்களின் சங்கமம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறது!

திமுக-வுடன் கூட்டணி என்று ஊடகங்களில் வந்த சில வதந்திகளை தூக்கிக் கொண்டு வருவதை தான் இத்தனை நாள் நீங்கள் தீட்டிக் கொண்டிருந்த மாபெரும் திட்டமா?

அதே ஊடகங்களில் நீங்கள் மூன்று பேரும்

எந்தப் பக்கமும் சாயாத தராசு போல செயல்பட்டு, எதிர்க்கட்சிகளுக்கு பேரவைத் தலைவர் அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்கும், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

-17வது சட்டப்பேரவையின் பேரவைத்

Load More